இரவு பார்ட்டியில் தோழிகளுடன் இருக்கும் நடிகை சமந்தா! கண்டுகொள்ளாத கணவர்..
நடிகர் சிம்புவின் வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகர் சமந்தா. இதையடுத்து தெலுங்கில் ஏ மாய ஜேசாவே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் தமிழில் பானா காத்தாடி படத்தில் ஆரம்பித்து நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர் வாய்ப்புகள் வர முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தற்போது தென்னிந்திய நடிகை என்ற அங்கீகாரம் பெற்று கொடிக்கட்டி பறந்து வருகிறார். 2017ல் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து போல்ட்டான கதாபாத்திரத்தினை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்தவகையில், சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்தார். இதனால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்துள்ளது என கிசுகிசுக்கவும் ஆரம்பித்துள்ளனர். கையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தா தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
மேலும் க்ளாமர் ஆடைகளை அணிந்து போட்டோஹூட்டும் விளம்பரங்களில் நடித்தும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது, வார இறுதியில் தோழிகளில் பார்ட்டி கொண்டாட்டட்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

