தீவிர மயோசிடிஸ் நோயின் தாக்கம்!!! படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை சமந்தா..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முக்கிய இடத்தினை பிடித்தார். நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு அதிலிருந்து மீண்டு வந்தாலும் படங்களில் மும்முரமாக நடித்தும் வந்தார்.
தற்போது சாகுந்தலம், யசோதா படத்தினை தொடர்ந்து பாலிவுட்டில் சிட்டாடல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு சண்டைக்காட்சி அமைந்திருக்கிறது. அப்போது இயக்குனர், சமந்தாவால் நடிக்க முடியுமா? ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என்று யோசித்திருக்கிறார்.
தன்னம்ப்பிக்கையுடன் சண்டைக்காட்சியில் நடிக்க முன்வந்து நடித்தும் முடித்திருக்கிறார் நடிகை சமந்தா. காட்சி முடிந்ததும் அப்படியே நடிகை சமந்தா மயங்கி கீழே விழுந்திருக்கிறாரான். பின் படக்குழுவினர் அவருக்கு உடனே சிகிச்சை கொடுத்துள்ளார்கள்.
