குழந்தைக்கு ஒருநாள் நீங்கள் நல்ல தந்தையாக இருப்பீர்கள்.. கண்கலங்கி பேசிய நடிகை சமந்தா..
சமந்தா - நாக சைதன்யா
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அங்கும் மிகபெரிய வரவேற்பை பெற்றார் நடித்த சமந்தா.
இதனை அடுத்து நடிகர் நாக சைதன்யாவுடன் தொடர்ந்து நடித்த சமந்தா, அவருடன் காதலில் விழுந்து கடந்த 2017ல் திருமணம் செய்தார். திருமணமாகி 4 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதன்பின் படங்களில் பிஸியாக நடித்த சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சையை மேற்கொண்டார். பல மருத்து சிகிச்சைகளை மேற்கொண்டு அதில் இருந்து மீண்டு வரும் சமந்தா, சினிமாவை தாண்டி சில தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
கண்கலங்கி பேசிய வீடியோ
சமீபத்தில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், நாக சைதன்யா பற்றி சமந்தா கண்கலங்கி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
அவர்களின் திருமணத்தின் போது எடுத்த வீடியோவில், உங்களால் நான் கனவு கண்டதுபோல் என் வாழ்க்கை மாறுவதை என்னால் உணர முடிகிறது.
நான் அறிந்த மிகப்பெரிய மனிதர் நீங்கள், நம் அழகான குழந்தைக்கு ஒருநாள் நீங்கள் நல்ல தந்தையாக இருப்பீர்கள் என்று தெரியும், எந்த உலகிலும் எந்த ஜென்மத்திலும் எனக்காக உங்களைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன் என்றும் பேசியிருக்கிறார்.