எழுந்து கூட நடக்க முடியாத மோசமான நிலை! மயோசிடிஸ் பிரச்சனைக்காக வெளிநாட்டுக்கு பறக்கும் நடிகை சமந்தா...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா நடிப்பில் யசோதா படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
விவாகரத்து
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார். இடையில் நாக சைதன்யாவுடன் காதலில் இருந்து பின் 2017ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வந்த சமந்தா 4 வருடம் கழித்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று கடந்த ஆண்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
மயோசிடிஸ்
விவாகரத்துக்கு பின் தன் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து சுதந்திர பறவையாக கிளாமர் ஆட்டம், போட்டோஷூட், போல்ட்டான கதாபாத்திரம் போன்றவற்றைகளில் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் உடலில் சில பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் 3 மாதங்களாக கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார். அதற்காக சிகிச்சை பெற்றும் அதிலிருந்து மீண்டு வந்து ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.
தென்கொரியா
இந்நிலையில், சமந்தாவின் உடல்நிலை தற்போது மோசமடைந்துள்ளதால் மயோசிடிஸ் நோய்க்கு மருத்துவம் பார்க்க தென்கொரியா நாட்டுக்கு செல்லவுள்ளாராம். தகுந்த சிகிச்சை பெற்றப்பின் குணமடைந்து திரும்பவும் இந்தியா திரும்பி நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடிக்கவும் இருக்கிறாராம் நடிகை சமந்தா.