சமந்தா விவாகரத்துக்கு இந்த இயக்குனர் தான் காரணமா? இப்படி நம்பி ஏமாந்திட்டியேமா!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவை கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். இதற்கு பல காரணங்கள் கூறி வந்தநிலையில் இருவரும் விவாகரத்துக்கு என்ன காரணம் யார் குறுக்கிட்டது என்று கூறாமல மெளனமாக இருந்தனர்.
இதன்பின் சமந்தா, நாக சைதன்யா படங்களில் பிஸியாக நடித்து வந்தனர். சுதந்திர பறவையாக மாறிய நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டும் ஆன்மீகம், போட்டோஷூட் என கலக்கி வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டின் பிரபல ரியாலிட்டி ஷோவான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமாருடன் கலந்து கொண்டார்.
அப்போது திருமண வாழ்க்கை சமந்தாவுக்கு சந்தோஷமாக அமையாததற்கு என்ன காரணம் என்று கரண் ஜோகர் கேட்டுள்ளார். அதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
ஏனென்றால் நீங்கள் கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று கே3ஜி படத்தில் கூறினீர்கள். ஆனால் பல கஷ்டங்களை கொடுக்கும் கேஜிஎஃப் படமாக என் வாழ்க்கையில் அமைந்துவிட்டது என்று காமெடியாக கூறியுள்ளார். இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.