விவாகரத்துக்கு பின் அரியவகையில் நோயால் பாதிப்பு!! கடும் கஷ்டத்திற்கு இடையில் நடிகை சமந்தா போட்ட பதிவு!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா நடிப்பில் யசோதா படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார்.
இடையில் நாக சைதன்யாவுடன் காதலில் இருந்து பின் 2017ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வந்த சமந்தா 4 வருடம் கழித்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று கடந்த ஆண்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
விவாகரத்துக்கு பின் தன் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து சுதந்திர பறவையாக கிளாமர் ஆட்டம், போட்டோஷூட், போல்ட்டான கதாபாத்திரம் போன்றவற்றைகளில் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் உடலில் சில பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் 3 மாதங்களாக கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.
அதற்காக சிகிச்சை பெற்றும் அதிலிருந்து மீண்டு வந்து ஓய்வு எடுத்து வருவதாகவும் சமந்தா கூறியிருந்தார். ஆனால் உடல்நிலையில் மோசமாக மாறியதால் வெளிநாடு சென்று சிகிச்சை பெற பிளான் போட்டுள்ளாராம் நடிகை சமந்தா.
இந்நிலையில் பல நாட்களுக்கு பிறகு தனது வளர்ப்பு நாயின் புகைப்படத்தை கிறிஸ்துமஸ் மரத்தோடு பதிவிட்டுள்ளார். மேலும் வெற்றியாளர்களின் தோல்வி நிறந்தமில்லை என்ற வீடியோ கருத்தினையும் பகிர்ந்திருக்கிறார்.