கட்டிப்பிடிக்க ஆள் இல்லை! விவாகரத்தான நிலையில் சமந்தா செய்த செயல்.

samantha pushpa tamilactress
By Edward Mar 20, 2022 11:00 AM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் டை ஆர்ட்டிஸ்ட்டாக நடிக்க ஆரம்பித்து அதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

சென்னை பெண்ணாக தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு என நடித்து வந்தார். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த சமந்த 2017ல் காதலித்து வந்த நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் சந்தோஷமாக இருக்கும் போது சில கருத்து வேறுபாடு ஏற்பட்ட விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். விவாகரத்துக்கு பிறகு சமந்தா கூண்டைவிட்டு சுதந்திரமாக பறக்கும் பறவையை போல தோழிகளுடன் ஆன்மீக சுற்றுலா க்ளாமர் போட்டோஷூட் ஐட்டம் பாடல் என்று மிகப்பெரியளவில் பேசப்படும் நடிகையாக மாறினார்.

புஷ்பா படத்தில் ஆடிய ஐட்டம் பாடலுக்கு5 கோடி அளவில் சம்பளம் வாங்கி தன் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியுள்ளார். இந்நிலையில் தனிமையில் இருக்கும் போது அவுட்டிங் செல்லும் சமந்தா சமீபத்தில் மரத்தை கட்டியணைத்த படி அவர் வெளியிட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.