விவாகரத்து சர்ச்சை.. நவராத்திரிக்கு காளிதேவியிடம் முறையிட்ட நடிகை சமந்தா..
Samantha
Gossip Today
By Edward
தென்னிந்திய சினிமாவில் பெரியளவில் பேசுபொருளாக மாறியிருக்கும் பிரச்சனை தான் சமந்தாவை பற்றி அமைச்சர் கொண்டா சுரேகா பேசியது தெலுங்கு சினிமாவை தாண்டி மற்ற சினிமாவையும் அதிரவைத்துள்ளது.
இதுகுறித்து சமந்தா, நாக சைதன்யா, நாகர்ஜுனா, அமலா உள்ளிட்ட பலரும் கொண்டா சுரேகவை வெளுத்து வாங்கினர். இதற்காக கொண்டா சுரேகா மன்னிப்பு கேட்டும் சமந்தா மற்றும் தன் குடும்பத்தினை அவதூறாக பேசியதற்காக நாகர்ஜுனா வழக்கும் தொடுத்துள்ளார்.
ஈஷா யோகா
இந்நிலையில் நவராத்திரி என்பதால் நடிகை சமந்தா ஈஷா யோகா மையத்திற்கு சென்று காளிதேவியை வழிபட்டுள்ளார்.
அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, உங்கள் வார்த்தைக்கு நன்றி தேவி என்று கூறியிருக்கிறார் சமந்தா. தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் சமந்தாவுக்கு ஆதவாக கருத்துக்களை கொடுத்து வருகிறார்கள்.