பல படவாய்ப்பு வந்தாலும்...தனுஷ் அந்த விஷயத்தில் சூப்பர்!! நடிகை சம்யுக்தா ஓபன் டாக்..
நடிகை சம்யுக்தா
மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்திருந்தார். தற்போது தமிழில், பென்ஸ் என்ற படத்தில் பூரி சேதுபதி படத்திலும் நடித்து வருகிறார்.
தனுஷ்
சமீபத்தில் சம்யுக்தா அளித்த பேட்டியில், ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான குணம் கொண்டவர்கள், அனைத்து நடிகர்களும் வேறுபட்டவர்கள். நான் தனுஷுடன் வாத்தி படத்தில் இணைந்து நடித்தேன். அவர் மிகவும் இயல்பான நடிகராக இருக்கிறார். ஆனால், திரையில் மிரட்டிவிடுவார். அவருடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன்.

பல படவாய்ப்புகள் என்னைத்தேடி வந்தாலும், அந்த கதையில் என் கதாபாத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டும் அந்த படத்தில் நடிப்பேன். நான் இதுவரை நடித்து இருக்கும் அனைத்து ரோலும் எனக்கு முக்கியத்துவம் கொண்ட ரோலாகத்தான் இருக்கும். அபடிப்பட்ட கதையில் தான் நான் நடித்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.