அப்பாவின் இரண்டாம் மனைவி கொடுத்த டார்ச்சர்!! கண்ணீர் விட்டு அழுத பிரஜின் மனைவி நடிகை சாண்ட்ரா..
தமிழ் சினிமாவில் தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் இருந்து பிரபலமானவர் நடிகை சாண்ட்ரா எமி. சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் பிரஜினை கல்யாணம் செய்து இரட்டை குழந்தையை ஈன்றார். அதன்பின் நடிப்பில் இருந்துவிலகிய சாண்ட்ரா சமீபத்தில் பேட்டியொன்றில் எமோஷ்னலாக பேசி அழுதிருக்கிறார். எனக்கு 12 வயது இருக்கும் போது அப்பா - அம்மா விவாகரத்து செய்துவிட்டார்கள்.
விவாகரத்தான பின் நானும் என் அண்ணனும் அப்பாவோடு தான் இருந்தோம். அப்பாவோடு இருந்த சில நாட்களில் அப்பா இன்னொரு கல்யாணம் செய்யப்போகிறேன் என்று சொன்னதும் உடனே அண்ணன் சரி என்று சொல்லிவிட்டார். நான் சரி என்று சொல்லவில்லை.
அப்பா திருமணத்திற்கு சம்மதம் சொல்லவில்லை என்றால் பின் அப்பா தனிமையில் இருக்கும் போது உன்னால்தான் என் வாழ்க்கை வீணாக போய்விட்டது என்று சொல்லுவார் என்று பயந்து சரி என்று கூறிவிட்டேன் என்று சாண்ட்ரா தெரிவித்தார். அதன்பின் என் சித்தி வந்த பின் எங்களுடைய வாழ்க்கை நரகமாக மாறி, எங்களுக்கு அதிக கொடுமைகள் நடந்தது. பின் அண்ணன் துணையாக இருக்கிறான் என்று தையரிமாக இருந்த போது 2016ல் அண்ணன் விபத்தில் இறந்துவிட்டார் என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார்.
அண்ணன் இறந்த சோகத்தில் அவரது காதலியும் தற்கொலை செய்து கொண்டார். அண்ணனுக்கு காதலி இருப்பது எங்களுக்கு தெரியாது என்றும் அந்த பொண்ணு இறந்தப்பின் தான் எங்களுக்கு தெரிந்தது. அந்நேரத்தில் நான் சீரியலில் நடிக்க துவங்கி, பிரஜனை சந்தித்தேன். எனக்கு நன்றாக நடிப்பவர்களை பிடிக்கும் என்பதாலும் பிரஜனின் குணங்களும் எனக்கு தெரிந்தததாலும் அவரை காதலித்து திருமணம் செய்து இரட்டை குழந்தைகளையும் பெற்றேன்.
இருவரும் குழந்தையை வளர்க்க கஷ்டப்பட்டோம். எங்களுக்கு இரு வீட்டின் ஆதரவு இல்லாததால் சாப்பிடக்கூட வழியின்றி கஷ்டப்பட்டோம். பிரஜனிடம் குழந்தைகள் பற்றிய கஷ்டத்தை சொல்ல மாட்டேன். இரட்டை குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப கஷ்டம் என்பதால் இரவு முழுக்க தூங்காமல் பிரச்சனை பல நாள் இருந்திருக்கிறது. பிரஜன் சிறந்த நடிகர்.
ஷூட்டிங் சென்று கொண்டிருக்கும் போது டிராபிக்கில் தூங்கிவிடுவதாக கூட இருந்தவர்கள் சொன்னதால் குழந்தை கஷ்டத்தை கூறமாட்டேன். பிரஜனுக்கு சினிமா சரியாக கைக்கொடுக்கவில்லை, ஆனால் சின்னத்திரை வெற்றியை கொடுத்தது. கண்டிப்பாக அதற்கான வெற்றி அவருக்கு ஒரு நாள் கிடைக்கும் என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார் நடிகை சாண்ட்ரா எமி.