நிக்கி கல்ராணி கல்யாணத்தில் அக்காவுக்கு பிறந்த குழந்தை! கண்டுகொள்ளாத பெற்றோர்..
தமிழ் சினிமாவில் ஒரு காதல் செய்வீர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இதையடுத்து டமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து அவரது தங்கை நிக்கி கல்ராணியும் சினிமாவில் அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்தார்.
இருவரும் சினிமாவில் பிஸியாக நடித்து வந்த நிலையில் நேற்று நிக்கி கல்ராணிக்கும் நடிகர் ஆதிக்கும் திருமணம் நடைபெற்றது. பிரம்மாண்ட முறையில் நடைபெற்ற திருமணத்திற்கு ஒருசில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டு வாழ்த்துக்கூறினார்கள்.
அதே சமயம் 2021ல் டாக்டர் Aziz Pasha என்பவரை திருமணம் செய்திருந்த செய்தியை அப்போது தான் தெரியப்படுத்தினார். அதற்கு முன் ஒரு வருடங்களுக்கு முன்பே ரகசிய திருமணம் செய்திருந்த சஞ்சனா சமீபத்தில் கர்ப்பமானார்.
நேற்று தங்கை திருமணமான அதே தேதியில் சஞ்சனா கல்ராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பலர் வாழ்த்துக்கள் கூறிய நிலையில் தன் தங்கை திருமணத்திற்கு வாழ்த்தினை சஞ்சனா பகிரவில்லை.
ஏனென்றால் அவர் மருத்துவமனையில் இருந்ததால் அவரால் வாழ்த்தினை பகிரமுடியவில்லை. ஆனால் தன் அக்காவிற்கு குழந்தை பிறந்த சேதியை கேட்டும் நிக்கி கல்ராணியை பார்க்க கூட வரவில்லையாம். அவரின் பெற்றோர்களும் நிக்கி கல்ராணி திருமணத்தில் இருந்துள்ளார்களாம்.
இதற்கு காரணம் 2020ல் சஞ்சனா கல்ராணி போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிகழ்வு தான் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.