நடிகை கனகா இப்படியாக இந்த இரண்டு விசயங்கள் தான் காரணம்!! உண்மையை கூறிய நடிகர் சரத்குமார்...
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கனகா. முன்னணி நடிகர்கள் படத்தில் ஜோடியாக நடித்து வந்த கனகா சமீபகாலமாக தனி வீட்டில் தனியாக வாழ்ந்து வரும் செய்தி இணையத்தில் வைரலானது.
சில ஆண்டுகளுக்கு நடிகை கனகா இறந்துவிட்டார் என்ற செய்திகூட வெளியானது. இந்நிலையில் நடிகர் சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கனகாவின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதை ஓப்பனாக தெரிவித்துள்ளார்.
கனகா ஒரு நல்ல உழைப்பாளி, சினிமா மீது அதிக காதல் வைத்திருக்கும் அவரின் வாழ்க்கையில் நடந்த சில ஏமாற்றங்களும் வருத்தங்களும் தான் அவர் மனதில் அழியாத காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமாவில் பலருக்கும் இப்படியான மன அழுத்தம் ஏற்படும் என்பதால் தான் நடிகர் சங்கத்தில் அவர்களுக்கு என்று நல்ல் ஆலோசனை வழங்க வேண்டும் என்று பலமுறை கூறி வந்ததாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
You May Like This Video