அவன் நாக்குப்பூச்சி மாதிரி இருக்கான்!! தனுஷ் - ஐஸ்வர்யா திருமணத்தால் கடுப்பான சரத்குமார்

Dhanush Sarathkumar Aishwarya Rajinikanth Actors Tamil Actors
By Dhiviyarajan Jan 30, 2024 02:49 AM GMT
Report

நடிகர் தனுஷ், கடந்த 2004 -ம் ஆண்டு ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

சமீபகாலமாக சில கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் - ஐஸ்வர்யா பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை இரண்டு பேரும் விவாகரத்து பெறவில்லை. அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அவன் நாக்குப்பூச்சி மாதிரி இருக்கான்!! தனுஷ் - ஐஸ்வர்யா திருமணத்தால் கடுப்பான சரத்குமார் | Sarathkumar Angry Reply On Dhanush Marriage

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ஐஸ்வர்யா - தனுஷ் திருமணம் பற்றி கூறியுள்ளார். அதில் அவர், தனுஷ் ஐஸ்வர்யாவை காதலிப்பதற்காகவே அப்போது போயஸ் கார்டனில் ஃப்ளாட்டை வாடகை எடுத்து தங்கி இருந்தார் என்று பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் எழுந்தது.

அவர்கள் திருமணம் நடந்த சமயத்தில் சரத்குமாரின் ஐயா படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டு இருந்தது. அங்கு நான் சென்று இருந்தேன்.

அப்போது சரத்குமார் என்னிடம், " யாருங்க அவன் ஒல்லியா நாக்கு பூச்சி மாதிரி ஒருத்தன் வந்திருக்கான். அவன் ரஜினி வீட்ல பொண்ணு எடுத்துருக்கான்" என்று கூறினார். இந்த மாதிரி தான் பலரும் தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் பற்றி பேசினார்கள்.. அது பொறாமையாக கூட இருக்கலாம் என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.