தேவயானியை 2 ஆம் திருமணம் செய்ய கேட்ட பிரபல நடிகர்!! அசிங்கப்படுத்தி அனுப்பிய தாயார்...
தேவயானி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை தேவயானி. முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், சரத்குமார் உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார். சினிமாவில் அறிமுகமாகி நடித்து வந்த தேவயானி பிரபல இயக்குனர் ராஜகுமரனை காதலித்து திருமணம் செய்தார்.
ஒருதலை காதல்
குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டதால் குடும்பமே இருவரை ஒதுக்கி வைத்திருந்தது. இப்படியொரு சூழலில் தேவயானி திருமணத்திற்கு முன்பே சரத்குமார் காதலித்து வந்துள்ளார். 1984ல் சாயா என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்ற சரத்குமார் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 16 ஆண்டு திருமண வாழ்க்கையை விவாகரத்துமூலம் முறித்துக்கொண்டனர். இதற்கு காரணம், சாயா மனைவியாக இருக்கும் போதே நடிகை தேவயானியை ஒருதலையாக சரத்குமார் காதலித்தது தானாம்.
நக்மா, ஹீரா
ஆரம்பத்தில் நக்மா, ஹீராவுடன் காதலில் இருந்து பின் தேவயானியை காதலித்திருக்கிறார் சரத்குமார். இதன்பின் தேவயானியின் அம்மாவிடமே சென்று பெண் கேட்டுள்ளார் சரத்குமார். மகளின் கேரியர் முக்கியம் என்று அசிங்கப்படுத்தி அனுப்பி இருக்கிறார் தேவயானி அம்மா. இதன்பின் தான் 2001 நடிகை ராதிகாவை திருமணம் செய்திருக்கிறார். தற்போது இருக்கும் சரத்குமாரை சரிபட மாற்றியதே நடிகை ராதிகா தான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.