வரலட்சுமி காசுக்காக திருமணம் செய்துகொண்டாரா.. தவறான கமெண்டுக்கு பதிலடி கொடுத்த சரத்குமார்!!
பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நிகோலய் ஏற்கனவே விவகாரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலட்சுமி - நிகோலய் திருமணத்திற்கு பற்றி பல மோசமான விமர்சனங்கள் தொடர்ந்து இணையத்தில் வந்துகொண்டு இருக்கிறது.
சரத்குமார், சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது மகள் திருமணத்தைப் பற்றிய தவறான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "நான் சோசியல் மீடியாக்களை கவனித்து வருகிறேன். சிலர் அவர்களின் நேரத்தை செலவிட்டு மற்றவர்களின் வாழ்க்கையை விமர்சித்து வருகிறார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து பேச வேண்டும்.
மறைந்து இருந்து விமர்சிப்பவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது? நான் என் மகளுக்காக மட்டுமல்ல, எல்லா பெண்களுக்காகவும் பேசுகிறேன். மற்றவர்களை தவறாக பேசுவதற்கான உரிமையை யார் கொடுத்தது? நான் எப்போதும் நெகட்டிவ் கமெண்டுகளைப் பார்க்க மாட்டேன். ஆனால், சிலர் இப்படி நெகட்டிவ் கருத்துக்களை பகிர்வது உணமையில் மனதளவில் கஷ்டமாக இருக்கிறது.
என் மகள் பணத்திற்காக திருமணம் செய்துகொண்டார் என்று கூறுகிறார்கள். அதற்கு நான் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. வரலட்சுமி எதற்காக திருமணம் செய்துகொண்டார் என்பது அவருடைய முடிவு. அவர் நிக்கோலாயை மனதார பிடித்து திருமணம் செய்துகொண்டார். சிலர் தவறாக கமெண்ட் செய்துகொண்டு நேரத்தை வீணடிக்கிறார்கள்," என்றார் சரத்குமார்.