கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்திய அம்மா.. செந்தில் மட்டும் இல்லைனா!! ரகசியத்தை கூறி நடிகை ஸ்ரீஜா..

Serials Senthil Tamil TV Serials Tamil Actress
By Edward Jul 27, 2024 12:30 PM GMT
Report

ரேடியோ மிர்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் ஆர் ஜே செந்தில். பல ஆண்டுகளாக ஆர் ஜே வேலை பார்த்துவிட்டு சின்னத்திரை சீரியலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். சரவணன் மீனாட்சி சீரியலில் சரவணன் ரோலில் நடித்த செந்தில், கதாநாயகியாக நடித்த மலையாள நடிகை ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரீல் வாழ்க்கையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதை பார்த்து ரியல் ஜோடியாக வேண்டும் என்ற ஆசை பலரிடம் இருந்தது.

கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்திய அம்மா.. செந்தில் மட்டும் இல்லைனா!! ரகசியத்தை கூறி நடிகை ஸ்ரீஜா.. | Saravanan Meenatchi Serial Sreeja Breaking Secrets

கடந்த 2014ல் ரியல் ஜோடியாக மாறி திருமணம் செய்து 8 ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. தற்போது செந்தில் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் பேட்டியொன்றில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.

அதில் ஸ்ரீஜா, எனக்கும் செந்திலுக்கும் திருமணம் நடப்பதற்கு முன் என் பெற்றோர் பார்த்த வரனுடன் நிச்சயம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் பெண் பார்க்க வரும் போது எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. இருந்தபோதிலும் என் அக்கா, அம்மா கட்டாயப்படுத்தியதால், அந்த திருமணத்திற்கு நான் ஓகே சொல்லினேன். ஆனால் எனக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. என் தோழியிடம் அப்போது பேசும் போது செந்தில் நம்பர் எனக்கு கொடுத்த போது, நான் பேசத்துவங்கினேன்.

கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்திய அம்மா.. செந்தில் மட்டும் இல்லைனா!! ரகசியத்தை கூறி நடிகை ஸ்ரீஜா.. | Saravanan Meenatchi Serial Sreeja Breaking Secrets

கல்யாணம் ஆகப்போகிறது ஏன் சோகமா இருக்கீங்க என்று கல்யாணத்தில் விருப்பம் இருக்கா? இல்லையா என்று முதலில் கேட்டார். அப்போது தான் கல்யாணத்தில் விருப்பம் இல்லை, அனைவரும் கட்டாயப்படுத்தியதால் நான் ஓகே சொல்லிவிட்டேன். உடனே, கல்யாணம் பிடிக்கவில்லை என்றால் வீட்டில் சொல்லிவிடுங்கள், என்று கூறி தைரியம் கொடுத்தார்.

பின் அம்மாவிடம் சென்று கல்யாணத்தில் விருப்பம் இல்லை, என்று கூறினேன். அதன்பின் தான் செந்திலிடம் பேச ஆரம்பித்து, பின் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியதால் முதலில் நான் காதலை சொல்லி பின் அவர் ஓகே சொன்னதாக நடிகை ஸ்ரீஜா தெரிவித்துள்ளார்.