நான் தோத்ததுக்கு விஜயகாந்த் எல்லாம் காரணமில்லை.. அதுதான்!! நடிகர் சரவணன் ஓப்பன் டாக்..
நடிகர் சரவணன்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் பல படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சரவணன். பருத்திவீரன், அலெக்ஸ் பாண்டியன், அரண்மனை, கடைக்குட்டி சிங்கம், கோலமாவு கோகிலா, மருதா, கார்கி, ஜெயிலர், லவ்வர் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வந்தார்.
சமீபத்தில் கூட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 44 நாட்களுக்கு பின் வெளியேற்றப்பட்டார்.
விஜயகாந்த் எல்லாம் காரணமில்லை
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கேப்டன் விஜய்காந்த் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். நான் சினிமாவில் 23 வயதில்தான் அறிமுகமாகினேன். அப்போது எனக்கு விஜயகாந்த் சாருக்கும் கிட்டத்தட்ட 18 வயது வித்தியாசம் இருக்கும்.
அப்போதைய காலக்கட்டத்தில் ரஜினி சாருக்கு அடுத்து அவர் தான் டாப்பில் இருந்தார். ஒரேமாதிரியான கண் இருப்பதால் என்னை, விஜயகாந்துடன் ஒப்பிட்டார்கள். என் நடிப்பு வேறு, அவரைப்போல் நடிக்கமாட்டேன். அதனால் தான் நான் தோற்றுப்போனேன்.
என் மூளையை மட்டும் வைத்து எதுவும் சினிமாவில் முடிவு செய்ய முடியாது, ஒரு கதையில் பலரின் ஈடுபாடு இருக்கிறது. ஒரே கதையில் பல படங்கள் நடித்தேன். கதை ஒருசில பேரிடம் கேட்டபோது, உனக்கு என்ன சினிமா பற்றித்தெரியும் என்று கேட்டார்கள்.
அதையெல்லாம் மாற்றி பருத்திவீரன் படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். இன்றுவரை என்னை சித்தப்பா என்று தான் கூப்பிடுகிறார்கள். எனக்கு படங்கள் வரவில்லை என்று வருத்தப்படவில்லை. எனக்கு என்ன முடியுமோ அதை தான் நான் செய்வேன் என்று நடிகர் சரவணன் போல்ட்டாக பேசியிருக்கிறார்.