சரிகமப சீனியர் 5-ல் 3 இலங்கை தமிழர்கள்!! யார் யார் தெரியுமா?
சரிகமப சீனியர் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியில் ஜூனியர் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மே 11 ஆம் தேதியோடு நிறைவடைந்தது.
டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் அடுத்த நிகழ்ச்சி எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர்.
சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளனர். இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மே 24 ஆம் தேதி முதல் ஆரம்பமானது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டி ராஜேந்தர் கலந்து கொண்டார்.
3 இலங்கை தமிழர்கள்
இந்நிலையில் சரிகமப சீனியர் 5ல் இலங்கையை சேர்ந்த மூன்று தமிழர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அதில், சுவிஸ் வாழ் இலங்கை தமிழர் பிரஷான், கிழக்கு இலங்கையில் இருந்து சபீசன், யாழ்ப்பாணத்தில் இருந்து தரங்கினி உள்ளிட்ட மூவர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே சரிகமப லிட்டில் சாம்ஸ் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக இலங்கையை சேர்ந்த கில்மிஷா யாழிசை தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


