இரண்டாம் திருமணம் செய்து சீதாவை ஏமாற்றினேனா? நடந்தது இதுதான்!! முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சதீஷ்..
தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சீதா. முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்து வந்த சீதா, இயக்குனர் ஆர் பார்த்திபனை 1990ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தினரை மீறி திருமணம் செய்து கொண்ட சீதா, பார்த்துபனுடன் சுமார் 11 ஆண்டுகள் குடும்பம் நடத்தி, இரு பெண் குழந்தைகளை பெற்று ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்திருக்கிறார்கள்.
அதன்பின் சீதாவுக்கு பார்த்திபனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்தனர். பின் நடிகை சீதா நடிகர் சதீஷை கடந்த 2010ல் திருமணம் செய்து 2016ல் விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் சீதாவின் இரண்டாம் காதலர் சதிஷ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் சீதாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். பார்த்திபனிடம் இருந்து அவரை பிரித்தேன், என்றெல்லாம் செய்தி வந்தது.
உண்மையில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள், அதுதான் உண்மை. ஒன்றாக வாழ்ந்தோம், விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டோம் என்று சொல்வது எல்லாம் சோசியல் மீடியாவும் பத்திரிக்கையும் கிளப்பிவிட்ட செய்தி தான். அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. இது சினிமா வட்டாரத்திலும் சின்னத்திரையிலும் எங்களுடன் நடித்த, வேலை பார்த்தவர்களுக்கு தெரியும்.
அதுமட்டுமின்றி நான் சீதாவுடன் சீரியலில் நடிக்கும் போது பார்த்திபனுடன் விவாகரத்து ஆகிவிட்டது. அதன்பின் தான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. என் மனைவி, சீதாவால்தான் பிரிந்து சென்றார் என்று செய்திகள் வந்தது. அதுவும் உண்மை இல்லை.
அதற்கு முன் என் மனைவி இரு மகன்களை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். என்னைவிட என் மனைவி அவர்களை நன்றாக பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை இருந்ததால் அவரை நான் தொல்லை செய்யவில்லை.
சீதாவை ஏமாற்றிவிட்டேன், அவரை பொருளாதார ரீதியாக ஏமாற்றிவிட்டேன் என்றும் செய்திகள் வந்தது. இந்த உலகம் ஆதாரமே இல்லாமல் எதை வேண்டுமானாலும் பேசும் செய்தியை பரப்ப வேண்டும் என்பதற்காக இப்படியான ஆதாரமற்ற செய்திகளை எழுதுகிறார்கள்.
இப்போது நானும் சீதாவும் நல்ல நண்பர்கள் தான், என் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் அவர் வருவார், இப்போதும் அதே நட்புடன் தான் நாங்கள் இருக்கிறோம் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகர் சதீஷ்.