நிவேதா பெத்துராஜ் என்ன இவங்களை விட பெரிய ஆளா.. மீண்டும் மீண்டும் சீண்டும் பிரபலம்..
கடந்த சில நாட்களாகவே நடிகை நிவேதா பெத்துராஜ் பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு பேசுபொருளாக மாறியிருக்கிறது. நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடியாக நடித்த போது நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் 50 கோடியில் பங்களா வாங்கி கொடுத்தார் என்ற செய்தியை பிரபல விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்திருக்கிறார். அவர் மீது நிவேதா பெத்துராஜுக்கு Possessive இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த விசயம் பூதாகரமாக பேசப்பட்ட நிலையில் நிவேதா பெத்துராஜ், இதுகுறித்து ஆதங்கமாகவும் எனது குடும்பத்தினரும் நானும் மிகுந்த ம்ன அழுத்ததில் இருப்பதாகவும் கூறி ஒரு பதினை பகிர்ந்தார்.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் சவுக்கு சங்கரிடம் இதுபற்றி கேட்ட போது, நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன், என் மீது வழக்கு கூட அவர் போடட்டும் என்று அழுத்தமாக கூறி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் கூறிய கருத்தினை பிரபல செய்தி நிறுவனம் ஒன்று விளையாட்டு போட்டியில் வெற்றிப்பெற்றதை ஏதோ பெரிய விசயம் போல் செய்திகளை வெளியிட்டுள்ளது.
இதற்கு சவுக்கு சங்கர், சாய்னாவை விட பெரிய
வீராங்கனையா நிவேதா பெத்துராஜ் என்ற
கேள்வி எழுப்பி மீண்டும் மீண்டும் அவரை
சீண்டியிருக்கிறார். இந்த விசயம் தற்போதும்
மீண்டும் உருவெடுத்து பேசுபொருளாக
மாறியிருக்கிறது.