ஆர்யாவால் சாயீஷாவிற்கு ஏற்பட்ட சோகம்.. குழந்தை பெற்ற பிறகு இப்படியொரு நிலைமையா
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை சயீஷா. இப்படத்திற்கு பின், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் காப்பான் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
மேலும் இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவுடன் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தைக்கு தாய் ஆனார். இந்நிலையில், தற்போது குடும்பத்தை பார்த்து கொள்வதா, இல்லை சினிமாவில் பாடங்கள் நடிப்பதா என்று குழப்பத்தில் இருக்கிறார் நடிகை சயீஷா.
இதனால், விரைவில் நடிகை சயீஷா சினிமாவை விட்டு விலகிவிடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த அணைத்து சூழ்நிலைகளையும் சமாளித்து, மீண்டும் திரையுலகில் கதாநாயகியாக சயீஷா என்ட்ரி கொடுப்பார் என்றும் தெரிவிக்கின்றனர். ஆர்யாவால் நடிகை சயீஷா இப்படியாகிவிட்டாரே என்று சிலர் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.