என் புருஷனை நானே கொன்னுட்டனு சொன்னாங்க!! ஷகீலாவிடம் எமோஷ்னலான பானுமதி..

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Aug 22, 2024 06:37 AM GMT
Report

நடிகை பானுமதி

சின்னத்திரை சீரியல் நடிகையாக தற்போது நம்ம வீட்டு பொண்ணு, சின்ன மருமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி வருபவர் நடிகை பானுமதி. சமீபத்தில் இவருக்கும் சீரியல் நடிகை ரிஹானாவுக்கும் இடையில் ஏற்பட்ட பேட்டி இணையத்தில் வைரலானதை அடுத்து தன் கணவர் மரணம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் எமோஷ்னாலாக நடிகை ஷகீலா எடுத்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

என் புருஷனை நானே கொன்னுட்டனு சொன்னாங்க!! ஷகீலாவிடம் எமோஷ்னலான பானுமதி.. | Serial Actress Banumathy Emotional Talk Husband

அதில், எனக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள், என் அம்மா, என் சகோதரியுடன் தான் இருக்கிறேன். இப்படியொரு குடும்பம் எனக்கு இருக்கிறது என்று யாரிடமும் பகிராமல் இருந்தேன். என் கணவர் ஒரு நடனர், கல்யாணம் எப்படி நடந்தது என்று தெரியாது, ஒரு நாள் என்னை பார்த்து பேசினார். நான் கல்யாணம் பண்ணும் போது எனக்கு 15 வயது, அவருக்கு 25 வயது தான்.

கணவர் மரணம்

எனக்கும் அவருக்கும் 10 வயசு வித்தியாசம். என் வீட்டில் வந்து பேசினார். 10 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்து வந்தேன். சினிமாவில் நடிக்கவோ எதற்கு செல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தபோது அவர் திடீரென மஞ்சள் காமாலையால் மரணமடைந்துவிட்டார். அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும், அவர் குடிச்சிட்டு போய்ட்டாரு, இப்போது நான்தான் கஷ்டப்படுகிறேன்.

என் புருஷனை நானே கொன்னுட்டனு சொன்னாங்க!! ஷகீலாவிடம் எமோஷ்னலான பானுமதி.. | Serial Actress Banumathy Emotional Talk Husband

அவர் தரப்பில் இருந்து எனக்கு சப்போர்ட் இல்லை, கணவர் இறந்தப்பின் பல பிரச்சனைகள் உருவாக்கினார்கள். கணவரை நான்தான் கொன்றுவிட்டேன் என்று பழி வைத்தார்கள். கடைசிவரை என் கணவருக்காக நான் போராடினேன், அது என் கணவருக்கு மட்டும்தான் தெரியும். அதன்பின் என் குழந்தைகளுக்காக நான் வாழ்கிறேன். என் பையன் என் ஜினியரிங் படிக்கிறான், என் பையனை பற்றி வெளியில் சொல்ல பயந்தேன் என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.