கரையான்சாவடி பங்களாவில் நடிகை ரிஹானா!! உண்மையை கூறிய பிரபலம்...
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை ரிஹானா. பல சீரியல்களில் நடித்து வரும் ரிஹானா, திருமணம் செய்ததை மறைத்து பணம் மோசடி செய்ததாக நடிகை ரிஹானா பேகம் மீது போலிசில் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ராஜ் கண்ணன்
ராஜ் கண்ணன் என்பவர் அளித்த புகாரில், தன்னுடன் நட்பாகப் பழகி வந்த ரிஹானா ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் விவாகரத்து ஆனதாகவும் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், இதன்பின் ரிஹானாவுக்கு ரூ. 20 லட்சம் வரை பணம் செலவு செய்த நிலையில், அவரது வீட்டிற்கு சென்றபோது கணவருடன் விவாகரத்தாகாமலேயே தன்னை திருமணம் செய்து மோசடி செய்ததாகவும் கூறி புகாரளித்திருந்தார். இதனைதொடர்ந்து ரிஹானா, ராஜ் கண்ணன் மீது பதிலுக்கு ஒரு புகாரளித்திருக்கிறார்.
ரிஹானா பேகம்
அதில், ராஜ் கண்ணன் தன்னிடம் சுமார் 15 லட்சத்துக்கும் மேல் பிசினஸ் டெவலப் செய்ய வாங்கினார். நண்பர் வீட்டிற்கு கூட்டிச்சென்று, செயின் போட்டார். ஆனால் அவர் போட்டது இந்து தாலி போல் இருந்ததால் அதை கழட்டிவிட்டேன் என்று ரிஹானா கூறியிருக்கிறார். இருவரும் மாறிமாறி புகாரளித்த நிலையில் போலிசார் இருவருக்கும் சம்மன் அனுப்பியப்பின் இன்று ஜூன் 18 ஆம் தேதி ஆஜராகியுள்ளனர். இந்நிலையில், ரிஹானாவின் இந்த செயல் குறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியொன்றில், சில அதிர்ச்சிகரமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
பயில்வான் ரங்கநாதன்
அதில், ரிஹானா பேகம் தனக்கு விவாகரத்து நடந்ததா? இல்லையா? என்பதை தொழிலதிபரிடம் மூடி மறைத்துள்ளார். ரிஹானா கரையான்சாவடி பங்களாவுக்கு மட்டும் அடிக்கடி வந்து சென்றுள்ளார். ராஜ் கண்ணன் ரிஹானாவின் 2 குழந்தைகளை ஏற்றுக்கொண்டாரா?. அடிக்கடி ஷூட்டிங் செல்வதாக சொல்லிவிட்டு வெளியூர் சென்றதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது, பின் ரிஹானா தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்யவில்லை என்ற குற்றச்சட்டை தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.
ரிஹானா அளித்த ஆடியோவில், பிசினஸ் விஷயமாக என்னிடம் 15 லட்சம் வாங்கியதாகவும் தங்க ஜெயின் போட்டார், அதன்பின் தான் அது தாலின்னு தெரிய வந்ததாக தெரிவித்துள்ளார். இருவரும் மாறிமாறி காசு கொடுத்ததாக சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களின் பண பரிமாற்றத்தை ஆய்வு செய்தால் உண்மை என்ன என்று தெரியவரும் என்று பயில்வான் தெரிவித்துள்ளார். இதுபோல் இருக்கும் நடிகைகள் ஒருசிலர் இருப்பார்கள்.
எந்த டிவி நடிகையும் வீட்டுக்கு வரவழைத்து அஜால் குஜால் பண்ணமாட்டார்கள். தன் வீட்டிற்கு யார் வேணாலும் வருவார்கள் கண்டுக்கொள்ளாதே என்று யாரும் அனுமதிக்கமாட்டார்கள். கல்யாணப்பின் புருஷன் வீட்டுக்கு தான் போகணும் ரிஹானா போகவில்லை என்றால் அவர்மீதுதான் தப்பு என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.