மெசேஜை பார்த்து சந்தேகப்பட்ட கணவர்.. விவாகரத்துக்கு காரணமே இதுதான்!! வேதனையில் சீரியல் நடிகை சந்தியா..

Serials Gossip Today Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Aug 23, 2024 08:30 AM GMT
Report

நடிகை சந்தியா

வம்சம், அத்திப்பூக்கள், சந்திரலேகா போன்ற முக்கிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தியா. திருமணமாகி இரு ஆண்டுகளில் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றிருந்தார்.

மெசேஜை பார்த்து சந்தேகப்பட்ட கணவர்.. விவாகரத்துக்கு காரணமே இதுதான்!! வேதனையில் சீரியல் நடிகை சந்தியா.. | Serial Actress Sandhya Has Share About Her Divorce

நிச்சயதார்த்தம் அன்றே எங்களுக்குள் சில பிரச்சனை இருந்தது. திருமணத்திற்கு பின் எல்லாம் சரியாகிவிடும் என்று அம்மா சொன்னதால் திருமணம் செய்து கொண்டதாகவும் ஆனாலும் எந்தவொரு சந்தோஷத்தையும் அனுபவிக்காமல் இரண்டே இரண்டு ஆண்டுகளி விவாகரத்து செய்ததாகவும் கூறியிருந்தார் நடிகை சந்தியா.

விவாகரத்துக்கு காரணம்

சமீபத்தில் அளித்த பேட்டியில், நிச்சயதார்த்தம் முடிந்தப்பின் இருவருக்கும் பிரச்சனை ஆரம்பித்தது. என் போனை செக் பண்ணி, அதில் ஏதோ பார்க்கக்கூடாததை பார்த்துவிட்டது போல் நடந்துகொண்டார். ரசிகர் ஒருவர் சீரியல் பார்த்தேன் நல்லா இருக்கு, அழகாக இருக்கீங்க என்று மெசேஜ் செய்திருந்தார். அதற்கு நான் ரீப்ளேவும் செய்யவில்லை.

மெசேஜை பார்த்து சந்தேகப்பட்ட கணவர்.. விவாகரத்துக்கு காரணமே இதுதான்!! வேதனையில் சீரியல் நடிகை சந்தியா.. | Serial Actress Sandhya Has Share About Her Divorce

ஏதோ பெரிய தவறு செய்துவிட்டேன் என்று சண்டை போட்டார். இதெல்லாம் நம்மேல் இருக்கும் லவ்ல தான் செய்கிறார், கல்யாணமாகிவிட்டால் சரியாகிவிடுமென்று நினைத்தேன். 2009ல் திருமணம் நடந்து, 2010க்குள் அவங்க எதிர்ப்பார்த்தது போல் நான் இல்லை என்று எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

இதனால் மியூச்சுவல் ஆக இருவரும் பிரிய முடிவு செய்து செய்தோம். பிரிவுக்கு இதுமட்டும் காரணம் என்று சொல்ல முடியாது பல காரணங்கள் இருக்கிறது என்று நடிகை சந்தியா தெரிவித்திருக்கிறார்.