காசுக்காக அப்படி செய்றேனா!! நடிகையின் கேள்விக்கு ஓபனாக பதிலளித்த நடிகை கிரண்
நடிகை கிரண்
நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அதை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற லிஸ்டிற்கு வர முயற்சித்தார்.

ஆனால், அதன் பிறகு அவர் என்ன ஆனார் என பலருக்கும் தெரியவில்லை, தவறான படங்களின் தேர்வால் சினிமாவை விட்டே விலகும் நிலை உருவாகிவிட்டது என்று கிரண் கூறியிருந்தார்.
காசுக்காக அப்படி செய்றேனா
இந்நிலையில் நடிகை ஷகீலாவுக்கு அளித்த பேட்டியொன்றில், இணையத்தில் நீங்கள் விபச்சாரம் நடத்துகிறீர்களா என்று கேட்கிறார்கள் என்று ஷகீலா கேட்க, இல்லவே இல்லை. நான் ஒரு பழங்கால பள்ளியில் இருந்து வந்தவள் என்று கூறியிருக்கிறார்.

என் மனசுல அந்த வலி இன்னும் இருக்கு. மோசமான உறவில் இருந்து விலகி வந்ததும், என் நண்பர்கள் உதவி செய்வார்கள். அதன்பின் இரவில் கால் செய்து அதுக்கு கூப்பிடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.
அதன்பின் வாய்ப்பில்லாமல் இருந்தேன், அதனால் தான் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வித்து வருகிறேன் என்று கூறியதும் ஷகீலா வருத்தப்பட்டுள்ளார். நான் ஒன்னும் பார்ன் ஃபிலிம் பண்ணவில்லை என்றும் நான் சரியான மனிதரை காணவில்லை என்பதால் திருமணம் செய்யவில்லை, இப்போதைக்கு அந்த ஆசையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.