வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு ரெட் கார்டு கொடுத்தது சங்கரா? இதுதான் காரணமா?
தமிழ் சினிமாவில் காமெடிகளுக்கு என்று தனித்தன்மையை உருவாக்கி தன் முக பாவனையால அனைவரையும் சிரிக்க வைத்து வருபவர் நடிகர் வடிவேலு. வைகைபுயல் என்று அனைவராலும் பெருமையுடன் கூறப்படும் வடிவேலு சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
அதற்கு காரணம் என்ன என்று பல கூறப்பட்டது. ஆனால், அதில் ஒன்றாக இருந்தவர் இயக்குநர் சங்கர். சில ஆண்டுகளுக்கு முன்பு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தினை இயக்குநர் சங்கருடன் நடிக்க கமிட்டாகி இருந்தாராம் வடிவேலு.
ஆனால் வடிவேலு மற்றொரு படத்தில் கமிட்டாகி நடித்ததால் சங்கர் எனக்கு வடிவேலுவால் பல கோடி இழப்பு ஆகிவிட்டது என்று தமிழ் பட தயாரிப்பாளர் குழுமத்திடம் புகாரை கொடுத்துள்ளார். இதற்கு தயாரிப்பு குழுமத்திடம் வடிவேலு இனிமேல் யார் படத்திலும் நடிக்க வைக்க கூடாது என்று ரெட் கார்டு வாங்க வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதன் பிறகு தான் நடிகர் வடிவேலுவால் சில ஆண்டுகள் சினிமாவில் நடிப்பதை தொடரவில்லையாம். அதன் காலகட்டத்தில் வடிவேலு அரசியலில் ஈடுபட்டாராம். தற்போது வரை வடிவேலுவும் சங்கரும் சந்திப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.