அந்த விசயத்துக்காக அப்பாவிடம் சண்டை போட்டு அடம்பிடித்த விஜய்!! ரகசியத்தை கூறிய இயக்குனர் சங்கர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், கோட் படத்திற்கு பின் முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக கூறி அறிக்கை வெளியிட்டார். நடிகர் விஜய், வெங்கட் பிரபுவின் கோட் படத்தினை முடித்துவிட்டு அதனை தொடர்ந்து கமிட்டாகிய படத்தில் மட்டும் நடித்து சினிமாவில் இருந்து விலகிவிடுவேன் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின் விஜய் பற்றிய விசயங்கள் தான் இணையத்திலும் தொலைக்காட்சி சேனல்களிலும் பேசுபொருளாக இருந்து வருகிறது.
அந்தவகையில் நடிகர் விஜய் பற்றி பிரபலங்கள் பேசிய விசயம் முதல், விஜய்யின் பழைய பேட்டிகள் வரை இணையத்தில் வீடியோக்களாக டிரெண்ட்டாகி வருகிறது. நடிகர் விஜய் நண்பன் படத்தில் நடித்திருந்த போது படக்குழுவினர் பேட்டியளித்திருந்தனர். அந்த பேட்டியில் விஜய் அவரது வீட்டில் நடந்து கொண்ட சிறுவயது சம்பவத்தை இயக்குனர் சங்கர் பகிர்ந்துள்ளார்.
எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் போது அவர்கள் வீட்டில் உட்கார்ந்திருந்தோம். அப்போது வீட்டில் பயங்கரமாக கத்தி அப்பாவும் விஜய்யும் சண்டை போட்டு கத்திக்கிட்டு இருந்தார்கள். அவர்களை பார்த்தால் படியில் இருந்து விஜய்யை, எஸ் ஏ சி தரதரன்னு இழுத்துக்கொண்டு வந்தார்.
இதை பார்த்து அப்பாவுக்கும் பையனுக்கும் பெரிய சண்டை என்று நினைத்தேன். விஜய் அம்மாவும் பயங்கரமாக ரென்ஷனாக இருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து எஸ் ஏ சி வந்ததும், என்ன ஆச்சி சார் என்றோம்.
ஒன்னும் இல்லை, ஊசி போட்டுக்க போகமாட்றான் என்று கூறினாராம். இதே சம்பவத்தை விஜய்யை பல ஆண்டுகளுக்கு முன் எடுத்த பேட்டியொன்றில் கூட இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.