என்னிடமே அதை கூறுகிறார்கள்..அதுக்காக நான் வெட்கப்படுகிறேன்!! பாடகி ஸ்ரேயா கோஷல்..
Gossip Today
Shreya Ghoshal
Tamil Singers
By Edward
இந்திய சினிமாவில் டாப் பின்னணி பாடகியாக திகழ்ந்து வரும் பாடகி ஸ்ரேயா கோஷல், ஒரு பாடலுக்கு பல கோடி சம்பளமாக பெற்று அதிக சம்பளம் வாங்கும் பாடகியாக திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், அக்னி பாத் படத்தில் இடம்பெற்ற சிக்னி சமேலி என்ற பாடலை சிறு குழந்தைகள் கூட பாடலின் அர்த்தம் என்ன என தெரியாமலே பாடுகிறார்கள். அப்பாடலை பாடிக்கொண்டு நடனமும் ஆடுகிறார்கள். பாடல் நன்றாக இருப்பதாக என்னிடமே கூறுகிறார்கள்.
யாராவது அப்படி கூறினால் எனக்கு சங்கடமாக இருக்கும். 5, 6 குழந்தைகள் இது போன்ற பாடல் வரிகளைப்பாடுவது சரியல்ல என்றும் இந்த பாடலை பாடியதற்கு நான் வெட்கப்படுகிறேன் என்று ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வரும் மார்ச் 1 ஆம் தேதி ஸ்ரேயா கோஷலின் இசைக் கச்சேரி நடக்கவுள்ளதால் அதற்காக அளித்த பேட்டியில் இதை கூறியிருக்கிறார்.