ஸ்ரேயாவிடம் அத்து மீறிய நடந்து கொண்ட மர்ம நபர்.. வெளியான பரபரப்பு வீடியோ
Shriya Saran
By Dhiviyarajan
2003 -ம் ஆண்டு வெளியான "உனக்கு 20 எனக்கு 18" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா.
இதன் பின்னர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்த இவர் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது ஸ்ரேயா மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அத்துமீறல்
சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்ற ஸ்ரேயாவிடம் ரசிகர்கள் செல்ஃபீ எடுக்கமுயன்றனர் இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது மர்ம நபர் ஒருவர் தவறாக அத்து மீறி நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
