மதுபோதையால் வாழ்க்கையை இழந்த சில்க் ஸ்மிதா.. அடிமையாக்கி சொந்தமாக்க துடித்த மருத்துவர்..
தமிழ் உட்பட தென்னிந்திய சினிமாவில் 80களில் இருந்தே கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டத்தால் கவர்ச்சி ஆட்டம் போட வந்த சில்க் ஸ்மிதா பிரபல இயக்குனர்களால் அறிமுகம் செய்யப்பட்டார்.
சில்க் ஸ்மிதா
அப்படி தென்னிந்திய படங்களில் கவர்ச்சி நடனமாடியும் நடித்து முன்னணி இடத்தினை பிடித்தார். சுமார் 450 படத்திற்கும் மேல் நடித்துள்ள சில்க் ஸ்மிதா தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டு 3 படத்தினை தயாரித்தும் இருந்தார்.
ஆனால் அப்படம் தோல்வியை தழுவி நஷ்டத்தை ஏற்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இதனால் மதுப்பழக்கத்தை பழகி இருக்கிறார். அப்படி பாக்கு போடுவது, அளவுக்கு மீறிய போதைக்காக போதை ஊசியையும் போட்டுள்ளார்.
இதனால் தான் சில்க் ஸ்மித்தா தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணமும் கூறப்பட்டது. அந்த போதை ஊசியை போடுவதற்காகவே ஒரு மருத்துவரை வரவழைத்து தொடர்ந்து போட்டு வந்துள்ளார் சில்க் ஸ்மிதா.
போதை ஊசி
இது போகபோக இருவருக்கும் இடையில் கணவர் மனைவிப்போல் வாழ ஆரம்பித்தது. மருத்துவருக்கு வயதுக்கு வந்த ஆண் மகன் இருந்ததாகவும் சினிமாவில் ஆர்வம் கொண்டதால் சில்க் ஸ்மிதா ஷூட்டிங்கிற்கு கூட்டிச்செல்வதுமாக இருந்துள்ளார்.
இருவருக்கும் நெருக்கம் இருப்பதை தவறாக நினைத்து மருத்துவர் சந்தேகப்பட்டு சண்டையிட்டுள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு மதுவுக்கு அடிமையாகி தற்கொலை முடிவையும் சில்க் ஸ்மிதாவை எடுக்க வைத்திருக்கிறார் அந்த மருத்துவர். இப்போது இந்த சம்பவத்தை பிரபல சினிமா பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.