மேடையில் பேச அழைத்த தொகுப்பாளினி!! அசிங்கப்படுத்திய இயக்குனர் சிங்கம்புலி..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் இயக்குனராகவும் வசனக்கார்த்தாவாக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று வருபவர் நடிகர் சிங்கம்புலி. ஆரம்பகாலக்கட்டத்தில் இயக்குனர் சுந்தர் சி, படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சிங்கம்புலி, அஜித்தின் ரெட், சூர்யாவின் மாயா படத்தினை இயக்கியும் இருந்தார். பேரழகன், கண்ணன் வருவான், ரேணிகுண்டா, விருந்தாளி போன்ற படங்களில் கதை, வசனம் எழுதியும் இருக்கிறார்.
மேலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த சிங்கம்புலி, தி லயன் கிங் படத்தில் டிமோன் கதாபாத்திரத்திற்கு குரலும் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி 70 கோடிக்கும் மேல் வசூலித்து வரும் மகாராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் சிங்கம்புலி.
இப்படிப்பட்ட ஒரு கலைஞரை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு படவிழாவில் தொகுப்பாளினி தன்னை வெறும் சிங்கம்புலி அவர்களை பேச அழைக்கிறேன் என்று கூறி அழைத்ததாக மேடையில் பேசியிருக்கிறார். நான் என்னென்ன வேலை பார்த்திருக்கிறேன் என்று கூறி அந்த தொகுப்பாளினிக்கு நோஸ்கட் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த தொகுப்பாளினி அந்நிகழ்ச்சியில், இயக்குனரும் நடிகருமான சிங்கம்புலியை பேச அழைக்கிறேன் என்று தான் கூறியிருக்கிறார்.
இதற்கு ஏன் அவர் இப்படியொரு விளம்பரம் செய்ய வேண்டும் என்று சிங்கம்புலியை பலரும் அப்போது கலாய்த்து வந்தனர். சமீபத்தில் மகாராஜா படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளதால் இந்த வீடியோவும் தற்போது எடிட் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
மேலும், சிங்கம்புலி அந்த நிகழ்ச்சியில் அப்படி பேசியதை பார்த்து தான் மகாராஜா படத்தில் நடிக்க கமிட் செய்ததாக பட இயக்குனர் மேடையில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கம்புலி, தொகுப்பாளினியை பற்றி பேசிய வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்க..