விஜயகாந்த், வடிவேலுவை பகைத்துக் கொண்டது ஏன்!! அம்மா பற்றி பல உண்மையை உடைத்த சிங்கமுத்து..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிங்கமுத்து. வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரபல கட்சிகளில் சேர்ந்து விஜயகாந்த் மற்றும் வடிவேலுவை பற்றி மோசமான பேசி சர்ச்சையில் சிக்கினார்.
அந்தவகையில், வடிவேலு, விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதல் என்ன பிரச்சனை என்ற விவரத்தை ஷகீலா எடுத்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் வடிவேலு, திமுக கட்சியில் இணைந்து தஞ்சாவூரில் நடந்த மாநாட்டில் அம்மாவுக்கு எதிராக பேசியிருந்தார்.

அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவிடம் இருந்து எனக்கு கால் வந்ததாகவும் ஆரம்பத்தில் நம்பாமல் அதன்பின் அறிந்து பயத்துடன் போயஸ் கார்டனுக்கு சென்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
எதற்காக அம்மா கூப்பிடுகிறார்கள் என்ற பயத்துடன் போனப்பின் மரியாதையுடன் என்னை வரவேற்பு அதன்பின் என்னிடம், விஜயகாந்த் மாதிரி பேசிய மிமிக்ரி வீடியோக்களை பார்த்ததாகவும், அதே மிமிக்ரியை என்னுடைய மேடையில் பேச வேண்டும் என்றும் கூறினார்.
அதன்பின் பிரச்சாரத்தில் நான் பேசியதாக் அதிமுக வெற்றி பெற்றது. வடிவேலு பேசின திமுக கட்சி தோற்றுப்போனது, அப்படித்தான் நான் அரசியலுக்கு சென்றேன். அந்தவகையில் விஜயகாந்த் வடிவேலுக்கு இடையில் சில பிரச்சனை வந்தாலும் அவர்கள் மீது எந்த பகையும் இல்லை என்று சிங்கமுத்து அவர்கள் பகிர்ந்துள்ளார்.