மறைந்த பாடகி பவதாரிணியின் கடைசி ஆசை... நிறைவேறலையே
Tamil Cinema
Ilayaraaja
By Yathrika
பவதாரிணி
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஜனவரி 25ம் தேதி இலங்கையில் உயிரிழந்தார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் புற்றுநோய் இருப்பதை அறிந்தவர் ஆயுர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றுள்ளார்.
ஆனால் சிகிச்சை தொடங்கும் போதே அவருக்கு புற்றுநோய் 4வது ஸ்டேஜில் இருந்துள்ளது.
மும்முரமாக சிகிச்சை தொடங்கும் முன்பே அவரது உயிர் பிரிந்துவிட்டது. இந்த நிலையில் சிகிச்சைக்கு முன் பவதாரிணி தனது கணவரிடம் ஒரு ஆசை வைத்துள்ளார். அதாவது தான் பாட வேண்டும், இசைக் கச்சேரி ஏற்பாடு செய்து தருவீர்களா என கேட்டுள்ளார், அதற்கு அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஆனால் கடைசியில் பவதாரிணியின் ஆசை நிறைவேறாமல் போனது.