அந்தப்புரம் இளையராஜா..கங்கை அமரன் அப்போ கோமாவில் இருந்தாரா!! விளாசிய பிரபலம்..
பாடகி சின்மயி
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் பல பாடல்களை பாடி அசத்தி வந்தவர் பின்னணி பாடகி சின்மயி. வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை முன்வைத்த சின்மயிக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.
லியோ படத்தில் திரிஷா குரலுக்கு சின்மயியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டப்பிங் செய்ய வைத்தார். இந்த விஷயம் பெரியளவில் பேசப்பட்டது. இதனைதொடர்ந்து தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடலை ஆடியோ லான்ச்சில் ஏ ஆர் ரஹ்மான், சின்மயியை பாட வைத்தார்.
பத்திரிக்கையாளர் சேகுவாரா
இந்நிலையில், மூத்த பத்திரிக்கையாளர் சேகுவாரா அளித்த பேட்டியொன்றில் கங்கை அமரன் மற்றும் சின்மயியை வெளுத்து வாங்கி பேசியிருக்கிறார். சின்மயிக்கு அநீதி நடந்திருந்தால், அதை கங்கை அமரன் கண்ணால் பார்த்திருக்க வேண்டும் அல்லது ஒரு பெண்ணாக இருந்து அந்த அநீதியால் நேரடியாக் பாதிக்கப்படிருக்க வேண்டும்.
அப்படி இருக்கும் போது கங்கை அமரன், இன்னொரு கலைஞரை எப்படி பிளேபாய் என்று சொல்லலாம்? இத்தனை வருடகால நட்பில் இருந்துவிட்டு இப்போது வந்து ஏன் சொல்லவேண்டும்.
நல்ல கவிஞர், நல்ல மனிதர் இல்லை என்று கங்கை அமரன் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறார். ஒருவர் நல்லவரா? கெட்டவரா என்பதை சமூகம் முடிவு செய்யும், இப்போது வந்து அந்த கவிஞர் கெட்டவர் என்றால் இத்தனை வருடம் கங்கை அமரன் கோமாவில் இருந்தாரா?.
தமிழா தமிழா பாண்டியன்
ஒருமுறை தமிழா தமிழா பாண்டியன் அண்ணன் அளித்த பேட்டியில், இளையராஜாவுக்கு அந்தப்புரம் இருக்கு, நான் சொல்வது பொய் என்றால், என் மீது வழக்கு போடுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார்.
இந்த செய்தி அனைத்து மீடியாக்களிலும் வெளியானது. சொந்த அண்ணன் மீது இப்படியொரு புகார் வரும்போது கங்கை அமரன் ஏன் அப்போது வாய்த்திறக்கல? கோமாவில் இருந்தாரா? என்று கடுமையாக கொந்தளித்து பேசியிருக்கிறார் பத்திரிக்கையாளர் சேகுவாரா.