எங்க அம்மா இருக்கும் போது என்னை கட்டிப்பிடிச்சாரு..கொலைக்கூட பண்ணுவாங்க!!சின்மயி ஓபன் டாக்..
பாடகி சின்மயி
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் பல பாடல்களை பாடி அசத்தி வந்தவர் பின்னணி பாடகி சின்மயி. வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை முன்வைத்த சின்மயிக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.
லியோ படத்தில் திரிஷா குரலுக்கு சின்மயியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டப்பிங் செய்ய வைத்தார். இந்த விஷயம் பெரியளவில் பேசப்பட்டது. இதனைதொடர்ந்து தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடலை ஆடியோ லான்ச்சில் ஏ ஆர் ரஹ்மான், சின்மயியை பாட வைத்தார்.
என்னை கட்டிப்பிடிச்சாரு
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், அவர் என்னை கட்டிப்பிடித்து அணைக்கும் போது, இது என்னமோ தப்பா இருக்கேன்னு கையும் ஆடவில்லை காலும் ஆடவில்லை, ஒரு நிமிடத்தில் நின்றுவிட்டேன். என் மூளை வேளை செய்யவில்லை. பின் பதறியடித்து ஓடிவிட்டேன். என் அம்மா கீழே இருந்தாங்க.
என் அம்மா கீழே இருந்தும் அந்த ஆளும் அதை செய்தார். அம்மா என்னை தனியா விடமாட்டாங்க, மேலே தானேன்னும் இருந்துட்டாங்க. உன் கேரக்டர் என்னன்னு டெஸ்ட் பண்றாரோ என்னவோ, இவங்க பெரிய ஆளுங்க, எது சொன்னாலும் கொலை பண்ணிட்டு கூட போய்டுவாங்க என்று சொன்னாங்க என்று சின்மயி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.