இமான் பிரச்சனைக்கு பின் ஆளே மாறிப்போன சிவகார்த்திகேயன்!! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மிகப்பெரிய அந்தஸ்த்தை பெற்று தன் திறமையால் முன்னேறியவர் நடிகை சிவகார்த்திகேயன். சமீபத்தில் மாவீரன் படத்திற்கு பின் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்தும் வருகிறார். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வரும் அயலான் படமும் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி இமான் பேட்டியொன்றில் பகிர்ந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்டு, சிவகார்த்திகேயன் - இமான் முன்னாள் மனைவி மோனிகாவிற்கு இடையில் தொடர்பு இருப்பதாகவும் ஆபாச சாட் ஆடியோக்களும் இருப்பதாகவும் செய்திகள் கசிந்தது. அதையெல்லாம் துளிக்கூட கண்டுக்கொள்ளாமல் தன் வேலையிலும் தன் குடும்பத்திலும் கவனம் செலுத்தி வந்தார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் கடந்த 3 மற்ரும் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயலால் சென்னையில் பலத்த மழையால் வெள்ளம் புரண்டது. இதனால் மக்கள் பெரியளவில் பாதிப்பு அடைந்து கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு பல பிரபலங்கள் உதவி வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நிவாரணத்தொகை 10 லட்சத்தை அளித்திருக்கிறார். இருவரும் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில், சிவகார்த்திகேயன் பார்க்க சின்ன பையன் போல் இருப்பதாக ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
