என்னண்ணே பண்ணி வெச்சிருக்கீங்க!! சூரியை பார்த்து மிரண்டுபோன தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்..
சூரியின் கொட்டுக்காளி
விடுதலை, கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் சூரி, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மலையாள நடிகை அன்னா பென் முக்கிய ரோலில் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் நினைத்திருந்தால், மிகப்பெரிய ஹீரோவாக இருப்பவரை வைத்து ஒரு கமர்சியல் படத்தை தயாரித்துவிட்டு போயிருக்கலாம். ஆனால் அப்படி இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்து, தயாரித்து வருவது பாராட்டத்தக்கது. தங்களது உறவு நண்பர்களாக, தொடர்ந்து அண்ணன் தம்பியாக மாறி தற்போது அவரது தயாரிப்பில் நடித்துள்ளது வரை மேம்பட்டுள்ளது.
மிரண்டுபோன தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் தன்னுடன் நடித்த சூரியை தோத்தாத்ரி உள்ளிட்ட ரோலில் பங்கமாக கலாய்த்து இருப்பார். தற்போது கொடுக்காளி படத்தை பார்த்த சிவகார்த்திகேயன், அண்ணே என்னண்ணே பண்ணி வெச்சிருக்கீங்க, பயமாக இருக்கிறது என்று கூறியதாக சூரி தெரிவித்துள்ளார்.
அவர் படத்தை பார்த்து ஒருமாதிரி ஆகவிட்டதாக சிவகார்த்திகேயன் தன்னிடம் குறிப்பிட்டதாக சூரி பகிர்ந்துள்ளார். இந்த போஸ் பாண்டி, இந்த தோத்தாத்ரியை தான் கலாய்த்தேனா? இந்த திறமையை வைத்துக்கொண்டுதான் தன்னிடம் அப்படி காமெடியாக நடித்து கொண்டிருந்தீர்களா என்று சிவகார்த்திகேயன் கேள்வி கேட்டதாகவும் சூரி பகிர்ந்துள்ளார்.