பாலா - முத்துமலர் விவாகரத்தை நிறுத்த போராடிய சூர்யாவின் தந்தை! சொல்லியும் அடங்காத மோகம்..
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் பாலா சில தினங்களுக்கு முன் 17 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார். மனைவி முத்து மலருடன் 4 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக முடிவெடுத்து குடும்பநல நீதிமன்றம் மூலம் சட்ட ரீதியாக பிரிந்துள்ளனர்.
இதற்கு காரணம் பாலா குடி, புகை பழக்கம் அதிகமாக அடிமையானதாலும், முத்துமலர் ஆண் நண்பருடன் வெளியில் சென்று வருவதுமாக இருந்ததால் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலாவுக்கு தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் நடிகர் சிவக்குமார். எதுவாக இருந்தாலும் சிவக்குமாரிடம் பாலா கூறுவது வழக்கம். விவாகரத்து தொடர்பாக பாலா - முத்துமலரிடம் சிவக்குமார் எவ்வளவு கூறியும் அவர்களின் இந்த முடிவினை தடுக்க முடியவில்லையாம்.
மனதை மாற்ற எவ்வளவோ கவுன்சிலிங் பெற்றும் அவர்கள் அடங்காமல் இந்த முடிவை எடுத்துள்ளார்களாம்.