Facebook, Insta-வுக்கே டஃப் கொடுக்க ஆசைப்பட்ட ரஜினி மகள்!! 2 வருடத்தில் இழுத்துமூடிய செளந்தர்யா..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்பதை தாண்டி இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் காலெடி எடுத்து வைத்தவர் தான் செளந்தர்யா ரஜினிகாந்த். கோச்சடையான் படத்தினை இயக்கி மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வந்த செளந்தர்யா, இரண்டாம் திருமணத்திற்கு பின் தனுஷை வைத்து ஒரு படத்தினை இயக்க திட்டமிட்டு இருந்தார்.
கடந்த 2021ல் ஷூட் என்ற குரல் சமூக ஊடக தளம் ஒன்றினை துவங்கினார் செளந்தர்யா. தமிழ் உள்ளிட்ட 15 இந்திய மொழிகள் மற்றும் சர்வதேச மொழிகளிலும் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த செயலியில் படிக்காதவர்கள் கூட எளிமையாக குரல் வழியாக தங்களின் கருத்தை தெரிவிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. ஃபேஸ்புக், எக்ஸ் தளம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கே டஃப் கொடுக்கும் என்று செளந்தர்யா எதிர்ப்பார்த்தார்.
அந்த ஆப்பை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் இழுத்து மூட செளந்தர்யா அதிரடியாக முடிவெடுத்துள்ளாராம். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் செளந்தர்யா தரப்பில் இருந்து இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.