பணத்துக்கு நான், ஜாலிக்கு அவங்க..நண்பர் மனைவியுடன் கணவர் தொடர்பு!! நடிகை சர்மிளா ஓபன் டாக்..

Gossip Today Marriage Tamil Actress Actress
By Edward Jun 18, 2025 11:45 AM GMT
Report

நடிகை சர்மிளா

மலையாள சினிமாவில் சமீபகாலமாக பெரிதாக பேசப்பட்டு வரும் ஹேமா கமிட்டி அறிக்கையால் பலரது உண்மை முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துக்கொண்டிருக்கிறது. மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சார்மிளா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திருமண வாழ்க்கை, விவாகரத்து பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பணத்துக்கு நான், ஜாலிக்கு அவங்க..நண்பர் மனைவியுடன் கணவர் தொடர்பு!! நடிகை சர்மிளா ஓபன் டாக்.. | South Actress Charmila Interview Marriage Life

பேட்டி

அதில், எனக்கு எந்த குறையும் இல்லை, பணத்தில் வசதி, அப்பா - அம்மா செல்லம், சினிமா வாழ்க்கையும் சிறப்பாக போச்சி. என் அப்பா - அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது ஒரு நபர் என்னை காதல் பிரபோஸ் செய்தார். நான் தவறான ஒருவரை தேர்ந்தெடுத்தேன். கல்யாண பத்திரிக்கை எல்லாம் கொடுத்துவிட்டோம், கல்யாண தேதியில் அவர் வரவில்லை, அதனால் கையை அறுத்து தற்கொலை முயற்சி செய்தேன். இப்போ அவர் நன்றாக இருக்கிறார்.

திருமண வாழ்க்கை

வேறொருவரை கல்யாணம் செய்தேன். முதல் கணவர் நண்பரின் மனைவியுடன் தொடர்பில் இருந்தார். பணத்துக்கு நான், ஜாலிக்கு அவங்கள் என்று இருந்தார், அதனால் அவரை விவாகரத்து செய்துவிட்டேன்.

பணத்துக்கு நான், ஜாலிக்கு அவங்க..நண்பர் மனைவியுடன் கணவர் தொடர்பு!! நடிகை சர்மிளா ஓபன் டாக்.. | South Actress Charmila Interview Marriage Life

அதன்பின் இரண்டாம் திருமணம் செய்த நபர், ரொம்ப பிரச்சனை செய்தார். ஷூட்டிங் சென்றால் ஏன் லேட்டா வர, இத்தனை நாள் ஏன் ஷூட் என்று மாமியாரும், கணவரும் பல கேள்விகளை கேட்டு டார்ச்சர் செய்தார். சினிமாவும் வேணும், குடும்பத்தையும் பார்த்துக்கணும் இரண்டையும் வேண்டும் என்று பார்த்தார்கள். சினிமாவைவிட்டுவா என்று சொன்னால் வந்திருப்பேன்.

வீட்டு பக்கத்தில் இருக்கும் ஸ்கூலில் பையனை சேர்த்தேன். நடந்து போய் கூட்டிட்டு வான்னு சொல்லுவாங்க.. அப்படி ஒருமுறை போகும் போது ஒரு நபர் என் பின்புறம் தட்டிச்சென்றார். அப்போது அங்கிருந்த போலிசிடம் கூறியபோது அவர், நீ ஒரு நடிகை அப்படித்தான் தட்டுவார்கள், ஏன் நடந்து வர்றீங்க என்று என்னை திட்டினார்.

ஆனால் கணவர் என்னை நடிகையாக நினைக்கவில்லை. நான் கிறிஸ்டியன், அவர் இந்து, எல்லாத்துக்கும் ஓகே என்று சொல்லிவிட்டு அதன்பின் இந்து மதத்திற்கு சென்றார், அதனால் நான் விவாகரத்து செய்துவிட்டேன். நான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யாமல் இருக்க இந்த பிரச்சனைகளும் காரணம்.

என்னுடன் வாழ்ந்தார்களோ, இல்லையோ? மற்றவர்களிடம் இருந்து என்னை காப்பாற்றியதற்கு நன்றி தான் சொல்ல வேண்டும் என்று நடிகை சார்மிளா தெரிவித்துள்ளார்.