2வது கல்யாணம் பண்ணால் அதுக்கு காரணம் என் கணவர்தான்!! நடிகை ஸ்ருதி சண்முக ப்ரீயா எமோஷனல்..
தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முக ப்ரியா, நீங்க ரெடி நாங்க ரெடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த 2023ல் அவரது கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக காலமானார். கணவரை நினைத்து பல பேட்டிகளில் எமோஷனலாக பேசி வருகிறார் ஸ்ருதி.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், என்னை 2வது கல்யாணம் பண்ணிக்க சொல்லி என் பெற்றோர்களும், என் மாமியாரும், என் மீது அதிக அக்கறை கொண்டவர்களும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
ஆனால் இந்த சமூக கட்டமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. தனியாக வாழ்வதும், 2வது திருமணம் செய்து கொண்டு வாழ்வதும் அவரவர் திறமைதான்.
வருங்காலங்களில் எனக்கு வேறொரு பையனை பிடித்தால்கூட அவரை எனக்கு அனுப்பி வைத்தவர் என் பாதுகாவலர் தேவை, என் கணவர் அருணாகத்தான் இருப்பார் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் ஸ்ருதி சண்முக ப்ரியா.