எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சி, அதுதான் முக்கியம்!! மனைவியிடம் ஓப்பனாக பேசிய ஸ்டெண்ட் சில்வா..
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் ஸ்டெண்ட் மாஸ்டராக பணியாற்றி அனைவரையும் கவர்ந்தவர் தான் ஸ்டெண்ட் சில்வா. பல படங்களில் வில்லன் ரோலில் நடித்து பிரபலமான சில்வா, சமீபத்தில் தன்னுடைய மனைவி, மற்றும் மகள், மகனுடன் பேட்டியொன்றில் கலந்து கொண்டு சிவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணம் எப்படி ஆனது என்ற கேள்விக்கு, என் அப்பாவின் சகோதரி தான் அவரை (மனைவி) பார்த்து பேசி ஓகே செய்தார்கள். நான் திருமணத்திற்கு முன் அவரை சந்தித்து பேசும் போது, என் வேலையை பற்றி சொல்ல வேண்டும் என்பதால், எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
அந்த கல்யாணத்துக்கு பேரு வேலை தாங்க, அந்த கல்யாணத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன். நீங்கபாட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு சொந்தக்காரங்க வீட்டுக்கு போலாம், அங்க வாங்க இங்க வாங்கன்னு சுத்திட்டு இருக்குறது நம்பலாம முடியாதுங்க, இதுதான் என் வேலை, அதுதான் முக்கியம், யோசித்துக் கொள்ளுங்க.
வருங்காலத்தில் இப்படியொரு ஆள்கிட்ட மாட்டிங்கிட்டோமேன்னு சொல்லக்கூடாது என்று சொன்னேன். அப்போது எனக்கு திருமணத்தின் மீது ஈர்ப்பு இல்லாமல் இருந்ததால், பல விசயத்தை சொன்னேன். அப்படி சொல்லியும், இவரை தான் கல்யாணம் பண்ணனும் என்று சொல்லிட்டாங்க என்று சில்வா தெரிவித்திருக்கிறார்.