முன்னாள் கணவரை பற்றி வாய்த்திறக்கவே கூடாது!! சுசித்ராவுக்கு விழுந்த முதல் அடி...
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து டாப் இடத்தில் இருந்தவர் பாடகி சுசித்ரா. டாப் இடத்தில் இருந்த சுசித்ரா நடிகர் கார்த்திக் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் பல ஆண்டுகளுக்கு பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
விவாகரத்துக்கு பின் சுசித்ரா நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து சுசித்ரா சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு காணாமல் போனார்.
சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி படுமோசமான குற்றச்சாட்டுக்களை கூறியும் சினிமா நட்சத்திரங்களின் மது பார்ட்டி குறித்தும் பேசி அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த சம்பவம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில் கார்த்திக் குமார் பாடகி சுசித்ரா மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் கார்த்திக் குமார் குறித்த கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.