தனுஷை அந்த கேடுகெட்ட 20 பேர் தான் கெடுத்தார்கள்.. சுச்சி லீக்ஸ்-ஐ ஆரம்பித்த சுசித்ரா..
ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் தற்போது மலையாள சினிமாவைத்தாண்டி இந்திய சினிமாத்துறையில் நடுங்கியுள்ளது. பலர் ஹேமா கமிட்டி தொடர்பாக இணையத்தில் பேசி வரும் நிலையில் பாடகி சுசித்ரா, தனுஷ் பற்றி சில விஷயங்கள் பேசியிருக்கிறார்.
அதில், நீங்க தனுஷ் மீது குற்றச்சாட்டு வைத்தும் ராயன் படம் நன்றாக ஓடியதால் ரசிகர்கள் இதில் இருந்து தெரியுதா, சுசித்ரா சொன்னது பொய் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்ற கேள்வி சுசித்ராவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு சுசித்ரா, நடிகர் தனுஷ் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு, அவரை எனக்கு பிடிக்கும். ஆனால் அவர் ஏன் கார்த்திக் குமாருடன் சேர்ந்து கெட்டுப்போனார் என்று தெரியவில்லை. தனுஷ் எனக்கு தம்பி மாதிரி, நாங்க நல்ல நண்பர்களாக இருந்தோம். சதி வேலை செய்து நல்ல நட்பை கெடுத்துவிட்டது கார்த்திக்குமார் தான்.
அவர் தான் ரியல் வில்லன் அவனுடைய உண்மை முகம் அனைவருக்கும் தெரியவேண்டும். கார்த்திக் குமாரை கல்யாணம் செய்வதற்கு முன் தனுஷை எனக்கு தெரியும், அவனும் நானும் நல்ல நண்பர்கள், அவனை பலமுறை உரிமையோடு திட்டி இருக்கிறேன். முதல் ஆளாக நான் தான் ஐஸ்வர்யாவ திருமணம் செய்ய வேண்டாம் என்று சொன்னேன், அப்படியொரு நெருக்கமானவர்கள்.
தனுஷை யாரையும் பழித்தீர்க்கும் ஆள் கிடையாது. ஒரு நைட்டில் கேடுகெட்ட 20 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு அவனை அப்படி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் தனுஷ் அப்படி நடந்துகொண்டார். என்னைப்போல் அவரும் பாதிக்கப்பட்டவர்தான். இப்போது அவரின் படம் வெற்றி அடைவதை பார்க்கும் போது உண்மையில் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.