சிறந்த ஆம்பளய அப்படி சொன்னதுக்கு Sorry!! முன்னாள் கணவரை கலாய்த்த பாடகி சுசித்ரா..
கடந்த 2016ம் ஆண்டு சுசீ லீக்ஸ் என்ற பெயரில், நடிகர் நடிகைகளின் சில அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார் சுசித்ரா. இவர் சில மாதங்களுக்கு முன்பு தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா எனப் பல பிரபலங்கள் மீது குற்றச்சாற்று முன் வைத்தார். ஆனால் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் இது தொடர்பாக பதில் அளிக்கவில்லை.
மேலும் சுசித்ரா தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் தன் பாலின ஈர்ப்பாளர் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது முன்னாள் கணவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி ஒரு வீடியோவை யூடியூப்பில் பகிர்ந்திருக்கிறார்.
பட்டினபாக்கம் போலிஸ் நிலையத்தில் தன்னை தன் பாலின ஈர்ப்பாளர் என்று சுசித்ரா கூறி அசிங்கப்படுத்தியதாக கூறி கார்த்திக் புகார் அளித்திருக்கிறார். அந்த போலிசார் என்னை தொடர்பு கொண்டு பப்ளிக்காகவும் இமெயில் மூலம் மன்னிப்பு கேட்கும்படி கேட்டனர். அதற்கு நானே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
சமுதாயத்தில் மோசமாக கருதப்படும் பட்டத்தை கொடுத்து அவரி கேரியரே பாதிக்கப்படியான செயலை செய்துவிட்டதாக கூறியதால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும், உலகத்தில் சிறந்த ஆம்பளயை போய் Gayன்னு சொல்லிட்டோம், மனசு கஷ்டமாக இருக்கிறது. கார்த்திக் குமார் என்னை பைத்தியம் என்று சொல்லி இருக்கிறார் என்றும் சுசித்ரா தெரிவித்திருக்கிறார்.