சூர்யாவை மயக்கி ஜோதிகா கல்யாணம் பண்ணிட்டாங்க!! அதிர்ச்சி கொடுத்த பிரபல பாடகி..
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக திகழ்ந்து தற்போது மிகப்பெரிய சர்ச்சை செய்திகளை பரப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பாடகி சுசித்ரா. சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் மூலம் நட்சத்திரங்கள் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகி சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது மீண்டும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
சூர்யா மீது காதல்
சமீபத்தில் நெறியாளர் முக்தர் எடுத்த பேட்டியில் கலந்து கொண்டு பேசிய பாடகி சூர்யா மீது காதல் ஏற்பட்டது குறித்து பகிர்ந்துள்ளார். சுச்சி லீக்ஸ்-ஐ நான் பண்ணவில்லை, அது அனைத்து சாமிகள் மீது சத்தியம். அப்படியில்லை என்றால் எனக்கு ஏதாவது ஆகிவிடும். என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தான் சுச்சி லீக்ஸ்-ஐ வெளியிட்டார்.
பத்திரிக்கையாளராக இருந்த போது விஜய், சூர்யா, மாதவன் எல்லாம் பழக்கமானார்கள். எனக்கு சூர்யாவை ரொம்பவே பிடிக்கும், நான் ஏன் சூர்யாவை விரும்பக்கூடாது.
அவர் மீது கிரஷ் ஏற்படவில்லை என்றால்தான் பிரச்சனை. சினேகா, லைலாவுடன் உன்னை நினைத்து படத்தின் போது நிறைய விஷயங்கள் பேசினார்.
அவர் விரும்பி இருக்கலாம், அதன்பின் ஜோதிகா வந்தப்பின் நாம் விலகிதானே ஆகணும், அவங்க யாரு நான் யாரு.
ஜோதிகா
ஜோதிகாவை பிடிக்கவில்லை என்று எல்லாம் இல்லை. சூர்யாவை மயக்கி ஜோதிகா கல்யாணம் பண்ணிவிட்டார். எனக்கு அடுத்த ஜென்மத்திலாவது சூர்யா புருஷனாக வர வேண்டும் என்று நினைத்தேன், நானும் அவரும் ஆயுத எழுத்து படத்தில் இணைந்து நடித்த சமயத்தில் சூர்யாவை நான் ரசித்துக்கொண்டே இருப்பேன்.
அதை பார்த்து மணிரத்னம் திட்டிக்கொண்டே இருப்பார் என்று பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.