இது பொம்மள மூஞ்சியா ஆம்பளமாதிரி இருக்கு! விமர்சித்த நடிகர் முகத்திற்கு நேராக திட்டிய பிரபல நடிகை!
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். படங்களில் நடிப்பதை தவிர பிரபல பத்திரிக்கையில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்தவர்.
பல ஆண்டுகளாக சினிமாத்துறையை சேர்ந்த பல பிரபலங்களின் பிடித்த நடிகராகவும் பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். தற்போது சினிமாவில் நடந்து வரும் கிசுகிசு, வதந்தி போன்ற சீக்ரெட் செய்தி மற்றும் சம்பவங்கள் பற்றி பேட்டி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில். நடிகைகளிடம் திட்டு வாங்கியதை பற்றி கூறியுள்ளார். முதன்முதலில் தன்னை திட்டியது நடிகை சுஹாசினி மணிரத்னம் தானாம். சுஹாசினி அறிமுகமாகிய முதல் படத்தின் போது பயில்வான் இது பொம்பள மூஞ்சியா ஆம்பள மாதிரி இருக்கு என்று விமர்சித்து எழுதியுள்ளாராம்.
பட விழா ஒன்றில் நடிகை சுஹாசினியை பார்த்த பயில்வான் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் நல்லா நடிக்கிறீர்கள் என்று கூறி பாராட்டியுள்ளார். அதற்கு சுஹாசினி, உண்மையை சொல்லுங்க, நீங்கள் தான் என்னை அப்படி கூறினீர்களே என்று நேராகவே கூறி திட்டியுள்ளாராம்.