நான் இரவு நேரத்தில் அந்த தப்பான பழக்கத்தை செய்தேன், விட முடியல!! ஓப்பனாக பேசிய சுனைனா
கடந்த 2008 -ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சுனைனா.
அதன் பின்னர் மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி லத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் ரெஜினா என்ற படம் வெளியானது. அந்த படத்தில் சுனைனா கவர்ச்சியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சுனைனா, பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனக்கு சிறுவயதில் இருந்து சமைக்க பிடிக்கும். திரைத்துறையில் வராமல் இருந்திருந்தால் செஃப்பா ஆகியிருப்பேன். பள்ளியில் படிக்கும் போது நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
என்னுடைய வாழ்க்கையில் பல தவறுகள் செய்து வருகிறேன். அதில் ஒன்று நான் இரவு நேரத்தில் அதிகம் மொபைல் மற்றும் லேப்டாப் பயன்படுத்தி கொண்டிருப்பது .மேலும் டி, காபி குடிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை எல்லாம் கொஞ்சம் குறைக்க நினைக்கிறன். ஆனால் இந்த கெட்ட பழக்கத்தை விட முடியவில்லை என்று கூறியுள்ளார்.