பண்ணாத தப்புக்கு மன்னிப்பு கேட்டு அழுத மனைவி குஷ்பூ!! வறுத்தப்பட்ட இயக்குனர் சுந்தர் சி..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சுந்தர் சி, கடந்த 3 ஆம் தேதி அரண்மனை 4 படத்தினை வெளியிட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். சுமார் 45 கோடிக்கும் மேல் வசூலித்து வரும் நிலையில் சுந்தர் சி, படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு சில அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்பூ, சில விசயங்களில் சர்ச்சைகளில் சிக்கினால் நீங்கள் கணவராக எப்படி அறிவுரை கூறுவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சுந்தர் சி, சில விசயங்கள் தப்பாக புரிந்து கொள்ளப்படுகிறது. 2004ல் தமிழ் பெண்களுக்கு கற்பு இல்லை என்று குஷ்பூ கூறினார் என்று மாலை பத்திரிக்கை ஒன்றில் போட்டுள்ளனர்.
குஷ்பூ சொல்லாத ஒன்றினை போட்டவர்களை பார்த்து, காலையில் வேறொரு பத்திரிக்கை ஒன்று வேறுமாதிரியாக மாற்றி செய்தி போட்டனர். அவர்களுக்கு மேல் நாங்கள் என்று மற்றுமொரு பத்திரிக்கை, தமிழ் பெண்களுக்கு கற்பு இல்லை என்ற அசிங்கமான வார்த்தையை போட்டார்கள். எந்த முட்டாளாவது அப்படி பேசுவாங்கள? நம்புவாங்களா? இது உடனே பிரச்சனையானது. அப்போது ஒரு கணவனாக என் மனைவிக்காக சப்போர்ட் பண்ணினேன்.
அப்போது ஜெயலலிதா அம்மா தான் உதவினார்கள். சும்மா ஒரு மன்னிப்பு கேட்பது போல் ஒரு பேட்டி கொடுத்துவிடுங்கள், இதை அரசியலாக மாற்றுகிறார்கள் ஜெயலலிதா அம்மா சொன்னார்கள். இதற்கு ஒரு விளக்கம் கொடுத்துவிடு, நான் சொன்னது தப்பாக புரிந்து கொள்ளப்பட்டது என்று மன்னிப்பு சொல்லிடுன்னு நான் சொன்னேன்.
அதற்கு அப்படி அழுதார்கள். நான் பண்ணாத தப்புக்கு ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குஷ்பூ சொன்னதுக்கு, நான் சொல்லிடு என்று சொன்னதுக்கு இன்றுவரை நான் வறுத்தப்படுகிறேன், எப்போதும் அவருக்கு சப்போர்ட்டாக இருப்பேன் என்று சுந்தர் சி கூறியிருக்கிறார்.