ஏன் நீ சாணிய அள்ள மாட்டியா.. நடுரோட்டில் கேவலமாக திட்டிய மணிவண்ணன்!! இயக்குனர் சுந்தர் சி..
தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராக திகழ்ந்து வரும் சுந்தர் சி, அரண்மனை 4 படத்தினை இயக்கி 55 கோடி வசூலை அள்ளி வருகிறார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் அரண்மனை 4 படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் பல விசயங்களை பகிர்ந்தும் வருகிறார். அப்படி மறைந்த இயக்குனரும் நடிகருமான மணிவண்ணனுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய போது நடந்த பல அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறுகையில், என்னுடைய ஆரம்பகாலத்தில் மணிவண்ணனுடன் உதவி இயக்குனராக ஒரு படத்தின் முதல் நாள் ஷூட்டிங் நடுரோட்டில் நடந்தது. அந்த ஷார்ட்-ஐ எடுக்கும் போது அங்கிருந்த சாணியை என்னை அள்ள சொன்னார். நானும் எனக்கு கீழ் இருந்த மற்றொரு உதவி இயக்குனரிடம் கூறி சாணியை அள்ளும் படி சொன்னேன்.
இதை கேட்ட மணிவண்ணன் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி என்னை திட்டிவதோடு மட்டுமில்லாமல் நீ ஏன் சாணியை அள்ளல, என மட்டமான கெட்டவார்த்தையில் திட்டினார். பல முறை என்னை அப்படி திட்டி இருக்கிறார். அப்படி அவர் திட்டியதால் தான் நான் மிகச்சிறந்த இயக்குனராக மாறியிருக்கிறேன்.
சினிமாவை பொறுத்தவரையில் ஒரு விசயத்தை அவங்க செய்வாங்க இவங்க செய்வாங்க என்று இருந்தால் நம்மால் வெற்றியடைய முடியாது, ஒவ்வொரு செயலும் நமக்கு ஒவ்வொன்றையும் கற்றுக்கொடுக்கும் என்று சுந்தர் சி ஓப்பனாக பேசியிருக்கிறார்.